Friday 27 May 2016

அப்பம் கலந்த சிற்றுண்டி.பெரியாழ்வார் திருமொழி



Asmath Gurubyo Namaha.

அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான்சுட்டு வைத்தேன் தின்ன லுறிதியேல் நம்பீ
செப்பிள மென்முலை யார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான்இங்கே வாராய்.



இப்பையல் அழுக்குடம்பனாயிரா நின்றான்என்று இடைச்சிகள் ஏசுவதற்கு இடமறும்படி நீராட வருவாயாகில் வேண்டிய பஷணங்கள் தருவேனென்கிறான்.  அப்பம் – ‘அபூபம்என்ற வடசொற்சிதைவு.  சிறுமை + உண்டி சிற்றுண்டி.  “ஈறுபோதல்..தன்னொற்றிரட்டல்” “சிற்றுண்டைஎன்றும் பாடமாம்.  (“சிறுபுறம்என்றவிடத்தில்) சிறு – ‘சிறுமைஎன்ற பண்பினடி. புறம் பேசுதல் மறைவில் குற்றத்தைச் சொல்லுதல்.

No comments:

Post a Comment