Saturday 28 May 2016

கண்டு கொண்டென்னை, கண்ணிநுண் சிறுதாம்பு



கண்டு கொண்டென்னைக் காரிமா றப்பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண்டி சையு மறிய இயம்புகேன்
ஒண்ட மிழ்ச்சட கோப னருளையே.

Asmath Gurubyo Nama; 


***- கீழ்ப்பாட்டில் “நன்புகழேத்தவருளினான்” என்றவிடத்துக் கூறிய புகழேத்துகையாவது இதுதான் என்று இப்பாட்டில் வெளியிடுகிறார்: ஆழ்வார் திருவாய்மொழி பாடவல்லவர், எம்பெருமானையும் வசப்படுத்தவல்லவர் இத்யாதியாகவுள்ள அவருடைய புகழ்களை நான் ஏத்துகிறவனல்லன்; பாவங்கள் கூடுபூரித்துக்கிடந்த அடியேனைப் பரமபரிசுத்தனாக்கி ஆட்கொண்ட பெருமையாதொன்றுண்டு. இதற்குமேல் வேறொருபெருமை ஆழ்வார்க்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை; அந்தப் பெருமையையே நாடெங்குமறியப் பறையடிக்கின்றேன் என்கிறார்.

கண்டுகொண்டு என்றவிடத்தில் கொண்டு என்பது துணைவினையன்று; கண்டு என்றும் கொண்டு என்றும் இரண்டும் தனித்தனி வினையெச்சங்கள். என்னைக் கடாக்ஷித்து, என்னுடைய துர்க்கதியே பற்றாசாக என்னை அங்கீகரித்தருளி என்றபடி. “இருந்தான் கண்டுகொண்டு எனதேழை நெஞ்சாளும்” என்று ஆழ்வார் பகவத் விஷயத்திலே அநுஸக்தித்தவாற்றை இவர் ஆழ்வார் விஷயத்திலே அநுஸந்திக்கிறார்.
காரி மாறன் - ஆழ்வாருடைய திருத்தகப்பனார்க்குப் பொற்காரியார் என்று திருநாமம். ஆழ்வார் உலகநடைக்கு மாறாயிருந்ததால் மாறன் எனத்திருநாமம் பெற்றார். மாறன் பிரான், மாறப்பிரான்; “சில விகாரமா முயர்திணை” (நன்னூல்).

பண்டை வல்வினையாவது-பகவச்சேஷத்வத்துக்கு எல்லைநிலம் பாகவதஸேஷத்வமென்று அறியப்பெறாமை.  பாகவத விஷயத்தை விலக்கிப் பகவானளவிலே பண்ணும் பக்தியைப் பாபமென்றிறே நம் ஆசாரியர்கள் அருளிச் செய்வது. 

“***“ = பரதேந ததாநக:” என்றவிடத்து அநக: என்பதற்கு வியாக்கியானம் ஸேவிக்க.

பாற்றி - பாறச்செய்து; பாறுதல் உருமாய்ந்தொழிதல்: பாறு என்ற வினைப்பகுதியடியாப் பிறந்து பிறவினையில் வந்த வினையெச்சம்.
அறியவியம்புகேன் =   “அறியச் சொன்னவாயிரம்” என்று-ஆழ்வார் உலக மறியத் திருவாய்மொழி சொன்னாப்போலே நான் உலகமறிய அவரது அருளைச் சொல்லுகிறேன் என்கிறார். “தமிழ்ச் சடகோபன்” என்றது தமிழையே நிரூபகமாகவுடைய ஆழ்வார் என்றபடி.

No comments:

Post a Comment