Friday 27 May 2016

வெண்ணெ யளைந்த குணுங்கும் பெரியாழ்வார் திருமொழி.

Asmath Gurubyo Namaha.

வெண்ணெ யளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன்
எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டுஇங்கு எத்தனை போதும் இருந்தேன்
நண்ண லரிய பிரானே நாரணா நீராட வாராய்.


கண்ணபிரான் * தாரார்தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி வெண்ணெயளைந்ததனால் உடம்பெல்லாம் அவ் வெண்ணெய்பட்டு மொச்சைநாற்றம் வீசும்..  அதனோடு விளையாடப் போனால் அதன்மேல் புழுதியும் படியும

இவ்விரண்டும் உடம்பிலிருந்தால் தினவுதின்னும்அதற்காகக் கண்ணன் உடம்பைப் படுக்கையிலே தேய்ப்பானாம், இப்படி எல்லாம் வருந்துவதைப் பொறுக்கமாட்டாமல் நீராடவழைக்கின்றனளென்க,  

விளையாடுபுழுதி வினைத்தொகை, விளையாடின புழுதியென விரிக்க, ‘உண்ட இளைப்புஎன்றவிடத்துப் போல, விளையாடியதனால் தோன்றிய புழுதியென்க. 

புளிப்பழம் எண்ணெயைப் போக்குவதாய்ப் புளிப்புச் சுவையுடையதாய் இருக்கின்ற ஒருவகைப் பழத்தைக் குறிக்குமென்பர், சீக்காயைக் காட்டு மென்பாருமுளர். எள் + நெய் = எண்ணெய்

No comments:

Post a Comment