Thursday 1 September 2016

ஆழ்வார்கள் போற்றிய நாம வைபவங்கள்

தமோதரா என்று மகனை அழையுங்கள்  

நாடு நகருமரிய மானிடப்பேரிட்டு 
கூடியழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே 
சாடிரப்பாய்ந்த தலைவா தாமோதராவென்று 
நாடுமின் நாரணன் தம்மன்னை நரகம்புகாள்.

 பொருள் - உங்கள் குழைந்தைகளுக்கு "தாமோதர" என்று பெயரிட்டு 
அழையுங்கள். சகடாசுரனை அழித்த "தலைவா" என்று கூப்பிடுங்கள். 
அவ்வாறு அழைத்தால் உங்களுக்கு நரகம் இல்லை என்று தாய்மார்களுக்கு ஆழ்வார் அறிவுரை கூறுகிறார். மனிதனின் பேர் இட்டால் மீண்டும் 
மீண்டும் பிறவி எனும் குழியில் விழ வேண்டும் என்கிறார். 

                                                      ஆழ்வார் திருவடிகளே சரணம்

Friday 19 August 2016

ஆழ்வார்களின் நாம வைபவம்

கண் பெற்ற பயன் 
 தேட்டருந்திறல் தேன்னினைத் தென்னரங்கனை திருமாதுவாழ் 
வட்டமில் வனமாளைமார்வனை வாழ்த்திருமால் கொள்சிந்தையராய் 
ஆட்டமேவியலர்ந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் தம் 
ஈட்டங்கண்டிடக் கூடுமேல் அதுகாணும் கண்பயனாவதே.

பொருள் - திருமாலின் திருநாமங்களைக் கூறி மெய் மறந்து 
ஆடும் உன்னையான அடியார்களின் குழாமைக் கண்டு வணங்கும் 
பாக்கியம் கிட்டுமேயனால், அதுவே தான் கண்ணைப் 
பெற்றதற்கான முழுப்பயனகக் கருதுகிறேன்
 என்கிறார் ஆழ்வார்.....

ஆழ்வார்கள் போற்றிய நாம வைப்பவன்.

ஆழ்வார்கள் போற்றிய நாம வைபவம் 
மகனை மாதவா என்று பெயரிட்டு அழைத்தல் 
நரகமில்லை.
1 - மானிடசாதியில் தொன்றிற்றோர் மானிட சாதியை 
மாநிடசாதியின் போரிட்டால் மறுமைக்கில்லை 
வானுடைமாதவ! கோவிந்த! வேன்றழைதத்க்கள் 
நானுடை நாரணன் தம்மன்னை நரகம்புகாள் 

மனிதசதியில் தோன்றிய மனிதக் குழந்தைக்கு, மனிதனின் பெயரை இட்டு அழைத்தல் மறு பிறப்பில் மோட்சமடைய வழியில்லை.
               'மாதவா கோவிந்த என்று அவன் நாமத்தை இட்டு அழைத்தால், அவர்தம் அன்னை நரகம் புகமட்டாள்.

Tuesday 2 August 2016

ஐந்து செம்பொருட்கள்

எம்பார் ஜீயர் சுவாமிகள் அருளியது 
அறியுடைய ஆத்மாக்கள் யாராயினும்,  அறிய வேண்டிய செம்பொருள்கள் ஐந்தையும் இருபது திருவாய்மொழிகளில்
தெளிவுறுத்தியுள்ளார் நம்மாழ்வார். இவையே வேதம் காட்டும் செம்பொருள் ஐந்து.
  1. அவரவர் தமதமது அறிவறி வகை இறைநிலை பல; அவற்றுள் மிக்க இறைநிலை எது? பெண்மை கலந்த ஆண்மை நிறைந்த திருமால் தத்துவம் .
  2. அறிவுள்ள மனிதன் தன் உண்மை நிலை எது ? உயிர்நிலை பற்றிப் பல கருத்துக்கள் இருப்பினும் அவற்றுள் மெய்யாம் உயிர்நிலை எது ? திருமால் அடியான் என்பதே.
  3. பகுத்தறிவு படைத்த மனிதனுக்கு பல நெறிகள் உண்டு. அவற்றுள் உயிரின் உய்வுக்கு ஏற்கத்தக்க நெறி யாது? உடல் பிணிப்பிலிருந்து விடுபட்டு இறைவன் பிடிப்பில் ஆட்படுதல்.
  4. தக்க நெறியில் செல்லும் பெருமக்களுக்குத் தடையாகியத் தொக்கியலும் ஊழ் வினைகள் எவை? அவை பற்றி அறிதலும் வேண்டும். ஆக்கை வழி உழலாமல் ஆன்மிக அறநெறி நடத்தல்.
  5. அறிவறிந்த மக்கள் பெரும் உயரிய நல்வாழ்வு எது? இறை உணர்வுடன். "தெரிந்து, எழுதி, வாசித்து, கேட்டு , வணங்கி வழிபட்டுப் பூசித்துப்" பொழுது போக்குவதே நல்வாழ்வு.
இவ்வைந்து செம்பொருள் நல்கும் நல்வாழ்வு பற்றிய தெளிந்த ஞானம் அருளுவது, திருவாய்மொழி .
இந்த 'அர்த்த பஞ்சகமே திருமந்திரத்தின் திரண்ட பொருள். திருமந்திர விளக்கமே திருவாய்மொழி'. இதனை 'அறியக் கற்று வல்லார் வைஷ்ணவர் ஆவர்' என்பது நம்மாழ்வார் அளித்த தீர்ப்பு.
என்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Sunday 31 July 2016

எம்பெருமானார் தரிசனம்

திருவாய்மொழி சிந்தனைச் செல்வர், செந்தமிழ் வேதியர், ஸ்ரீ வைஷ்ணவ சிம்மம் , திருமால் ஆசிரியர் 
ஸ்ரீ உ.வே. குமாரவடி சே. இராமாநுஜாசார்யர் 
(தற்போது ஸ்ரீபெரும்பூதூர் அப்பன் பரகால ராமாநுஜ
எம்பார் ஜீயர் சுவாமி )
பண்தருமாறன் பசுந்தமிழ், ஆனந்தம் பாய் மாதமாய் விண்டிட வந்த எங்கள் இராமானுச முனிவேழம், மெய்ம்மை கொண்ட நால்வேதக்கொழுந்தண்டம் ஏந்திக் குவலயத்தே மண்டி வந்து ஏன்றது, வாத்தியர்கள் உங்கள் வாழ்வற்றதே! என்று அமுதனார் வாக்கும் பலித்தது !
முத்தியோ சிலரது சொத்து என இருக்கையில் இத்தமிழ் நாடு தன் அருள் தவப்பயனாய் இராமனுசனை ஈன்ற தன்றோ" என புரட்சிக் கவிஞ்ர் பாரதிதாசனும் பிற்காலத்தில் ஒப்பும்படி மாறன் அடிபணிந்து உய்ந்த இராமானுசன் தமிழகத்தில் வெற்றி கண்டு வீறு நடையிட்டார்.
எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்துள்ளார்
தீதில் நன்னெறியாம் திருமால் நெறி தவிர மனித சாதனைகள் எதனாலும், உயிர்க்குலம் அமைதி காணவியலாது !
கலியின் கோலங்கள், அவலங்கள் அடங்கிட நமக்கு இன்றுள்ள ஒரே வழி, ஆன்மிகத் திராவிடமே, அதாவது திருவாய்மொழி எனும் பகவத் விஷயமே. இறைவனை அறிவதற்கு மட்டுமின்றி அவனது குணங்களில் ஆழ்ந்து அடிமை புரிவதற்கும் ஆனந்த முறுவதற்கும் வையத்து வாழ்வாங்கு வாழ வழி வகுப்பது, செந்தமிழ் வேதம் திருவாய்மொழியே
அந்நூல் பயனை, ஆழ்வாரின் வாக்கிலேயே கூறிமுடிப்போம்
பொலிக! பொலிக! பொலிக!போயிற்று வல்லுயிர்ச்சாபம் 
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை 
கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் 
மண்மேல் மாலியபுகுந்து இசைபாடி ஆடி உழிதரக்கண்டோம் 

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம் 
தொண்டீர்! எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும் 
பொலிக! பொலிக!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Saturday 30 July 2016

முதல் திருமொழி

1. வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
    வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய
    சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
    இடராழி நீங்குகவே என்று

 [வையம் தகளியா.] தகளியாவது-நெய்க்கும் திரிக்கும் ஆதாரமாயிருக்கிற அகல்.(தாளி என்று உலகவழக்கு. பூமியானது கடிந வஸ்துவாயிருப்பதால் அதைத் தகளியாகவும், கடலானது த்ரவ வஸ்துவாயிருப்பதால் அதை நெய்யாகவும், ஸூர்யன் ப்ரகாசஸ்வரூபனாயிருப்பதால் அவனை விளக்காகவும் ரூபித்து அருளிச்செய்கிறார். இங்கு இங்ஙனே ரூபணம் செய்வதன் கருத்து யாதெனில்; சூந்யமே தத்துவமென்றும், உலகம் ஒரு ஈச்வரனையுடையதல்ல என்றும் பலபடியாகப் பகரும் மதாந்தரங்ளை மறுத்து விசித்திரமான பிரபஞ்சத்தை நிருமிக்கவல்ல ஞானசக்தி முதலிய குணங்களையுடைய திவ்விய மங்கள விக்ரஹத்தோடு கூடிய ஸர்வேச்வரன் உளனென்றும் அவனுக்கு அடிமை செய்கையே புருஷார்த்தமென்றும் இப்பா சுரத்தால் விளக்கப்பட்டதாகும்.
ஸூர்யன் சிறிதும் தவறாமல் உதிப்பதும் அஸ்தமிப்பதுமாக நீடுழியாய் நடந்து வருவதானது-விசித்ரசக்தி வாய்ந்த ஸர்வேச்வரனொருவனுளன் என்பதை நமக்கு நன்றாக விளக்குகின்ற தன்றோ. வார்கடலின் நிலைமையும் வையத்தின் நிலைமையும் இவ்வுண்மையையே வற்புறுத்துகின்றன. கடலானது தன்னிடத்தில் பல பல ஆற்றுப் பெருக்குகள் வந்து விழுதலால் நிறைந்து வழிதலாவது, அவை வந்து விழாத காலத்தில் வடிந்து குறை படுதலாவது ஒன்றுமின்றியே எப்போதும் ஸமநிலைமையாகவே யிருந்துகொண்டு எல்லையை மீறாதிருப்பதும், ஐம்பதுகோடி யோஜனை தூரத்தளவும் பரந்து கடினமாயிராநின்ற இப்பூமியானது பெரியவெள்ளத்தில் ஒரு கழற்காய் மிதப்பதுபோல மஹார்ணவ ஜலத்தில் மிதந்துகொண்டிருப்பதும் இவை தம்மைப் படைத்தவொரு முழு முதற் கடவுளின் அற்புதமான சக்தி விசேஷத்தைப் புலப்படுத்துகின்றனவன்றோ. அப்படிப்பட்ட அபாரசக்தியுக்தனான ஒரு ஜகத்காரணபூதன் ஸித்திக்கும்போது அப்பெருமானுக்குக் கைங்கரியம் செய்யவேண்டுதல் முக்கியம்; கைங்கரியம் மாநஸிக மென்றும் வாசிகமென்றும் காயிகமென்றும் மூன்று வகைப்படும்; அவற்றுள் வாசிக கைங்கரியமான பாசுரம் பாடுதலை அடியேன் செய்கின்றேன்; இக்கைங்கரியத்தை இதுவரையில் நான் செய்யக்கூடாதபடி இடையூறாகவிருந்த ஸம்ஸாரத் துன்பத்திரள்கள் இன்றோடு ஒழிந்திடுக-என்றாயிற்று.
முன்னடிகளின் கருத்தை ஊன்றி நோக்குமிடத்தில் இவ்வாழ்வார் அநுமாநத்தினால் ஈச்வரனை ஸாதிப்பதாக ஏற்படுகின்றது; சராசரரூபமான இந்த பிரபஞ்சம் முழுவைதையும் படைத்து நடத்திக்கொண்டு போவதற்குப் பாங்கான வல்லமை வாய்ந்த ஸர்வேச்வரனொருவனுண்டு என்பதை வையம் கடல் ஸூர்யன் என்ற மூன்று பொருள்களின் நிலைமையைச் சொல்லுகிற முகத்தினால் ஸமர்த்தித்தபடியால் அநுமாநத்தாலே ஈச்வரனை ஸாதிக்கிற தார்க்கிகர்களின் படியை அடியொற்றினாராகிறார்; இதுகூடுமோ? சாரீரகமீமாம்ஸையில் சாஸ்த்ரயோநித்வாதிகரணத்தில் அநுமாநத்தால் ஈச்வரனை ஸாதிக்கலாகாதென்று மறுத்து வேதப்ரமாணமொன்றினாலேயே ஈச்வரனுடைய உண்மையை உணரவெணுமென்று ஸ்தாபித்திருப்பதற்கு மாறாக இஃது இருக்கின்றதே! என்று சிலர் சங்கிக்கக்கூடும்; வேதத்துக்கு விருத்தமாக அநுமாநங்கொண்டு ஸாதிப்பதை அங்கு மறுத்துரைத்த மாத்திரத்தினால் வேதத்துக்கு விருத்தமல்லாத அநுமாநங் கொள்வதில் பிசகுள்ளதாக நினைக்கலாகாது . இது ஸ்ரீபாஷ்யாதி ஸம்மதமுமாம் விரிப்பிற் பெருகும்.