Sunday 31 July 2016

எம்பெருமானார் தரிசனம்

திருவாய்மொழி சிந்தனைச் செல்வர், செந்தமிழ் வேதியர், ஸ்ரீ வைஷ்ணவ சிம்மம் , திருமால் ஆசிரியர் 
ஸ்ரீ உ.வே. குமாரவடி சே. இராமாநுஜாசார்யர் 
(தற்போது ஸ்ரீபெரும்பூதூர் அப்பன் பரகால ராமாநுஜ
எம்பார் ஜீயர் சுவாமி )
பண்தருமாறன் பசுந்தமிழ், ஆனந்தம் பாய் மாதமாய் விண்டிட வந்த எங்கள் இராமானுச முனிவேழம், மெய்ம்மை கொண்ட நால்வேதக்கொழுந்தண்டம் ஏந்திக் குவலயத்தே மண்டி வந்து ஏன்றது, வாத்தியர்கள் உங்கள் வாழ்வற்றதே! என்று அமுதனார் வாக்கும் பலித்தது !
முத்தியோ சிலரது சொத்து என இருக்கையில் இத்தமிழ் நாடு தன் அருள் தவப்பயனாய் இராமனுசனை ஈன்ற தன்றோ" என புரட்சிக் கவிஞ்ர் பாரதிதாசனும் பிற்காலத்தில் ஒப்பும்படி மாறன் அடிபணிந்து உய்ந்த இராமானுசன் தமிழகத்தில் வெற்றி கண்டு வீறு நடையிட்டார்.
எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்துள்ளார்
தீதில் நன்னெறியாம் திருமால் நெறி தவிர மனித சாதனைகள் எதனாலும், உயிர்க்குலம் அமைதி காணவியலாது !
கலியின் கோலங்கள், அவலங்கள் அடங்கிட நமக்கு இன்றுள்ள ஒரே வழி, ஆன்மிகத் திராவிடமே, அதாவது திருவாய்மொழி எனும் பகவத் விஷயமே. இறைவனை அறிவதற்கு மட்டுமின்றி அவனது குணங்களில் ஆழ்ந்து அடிமை புரிவதற்கும் ஆனந்த முறுவதற்கும் வையத்து வாழ்வாங்கு வாழ வழி வகுப்பது, செந்தமிழ் வேதம் திருவாய்மொழியே
அந்நூல் பயனை, ஆழ்வாரின் வாக்கிலேயே கூறிமுடிப்போம்
பொலிக! பொலிக! பொலிக!போயிற்று வல்லுயிர்ச்சாபம் 
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை 
கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் 
மண்மேல் மாலியபுகுந்து இசைபாடி ஆடி உழிதரக்கண்டோம் 

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம் 
தொண்டீர்! எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும் 
பொலிக! பொலிக!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

No comments:

Post a Comment